பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி அபார ஆட்டம் மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளீர்கள்; அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23ம்தேதி நடந்த சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே விராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டம்தான். இந்நிலையில் கோஹ்லியின் அபாரமான ஆட்டம் குறித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது: நீங்கள் அழகு... மிகமிக அழகு! இன்றிரவு (23ம்தேதி) நம் மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்... என் அன்பே. உங்களின் மன உறுதியும், நம்பிக்கையும் மனதைக் கவரும். என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நம் மகள் மிகவும் சிறியவளாக இருந்தபோதிலும், அவளுடைய அப்பா அன்று இரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் நீங்கள் வெளியே வந்தீர்கள். அருமையான ஆட்டத்தை தந்தீர்கள். உம்மை நினைத்து பெருமை படுகிறேன். உங்கள் வலிமை மிக சிறந்தது. என்றென்றும் உங்களை நேசிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா மகிழ்ச்சியுடன், நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories: