பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த புதுச்சேரி போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (48). அங்கு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ேநற்று தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றுள்ளார்.