புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 31வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா நகரில், மழைக்காலங்களில் மாதவரம் ரெட்டேரியில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். இதனால், அப்பகுதியில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அறிஞர் அண்ணா நகர் பிரதான சாலை நாகமுத்து மாரியம்மன் கோயில் அருகே பழைய தரை பாலத்தை இடித்து புதிய பாலத்தை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டது.