ஈரோடு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் 2 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மாலை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் முசாப்தீன் (27), சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக இருப்பது தெரிய வரவே ஈரோடு வடக்கு போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரை 2 நாள் காவலில் விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாலதி கடந்த 10ம் தேதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, ரகசிய இடத்தில் வைத்து ஆசீப் முசாப்தீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
