சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய வைகாசி தேரோட்டவிழாவில் பக்தர்கள் 3 லட்சம் சிதறு தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிணம்புணரி அருள்மிகு ஸ்ரீசேவுகப்பெருமாள் அய்யனார் ஆலைய வைகாசி விசாகா பிரமோற்சவ விழா கடந்த ஜுன் 5ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான இன்று திரு தேரோட்டம் நடைபெற்றது. பூரணை, புஸ்களையுடனான சேவுகப்பெருமாள் அய்யனார் காலை 10 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளினார். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிடாரி அன்னை ஆகிய சிறிய ரதத்தில் அருள்பாலித்தனர். நாடார்கள் மேளதாளத்துடன் வந்து நேற்று மாலை 4.30 மணிக்கு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் ஓடிவந்த திருதேர் சரியாக காலை 5.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.