ஊட்டி: நீலகிரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களில் மலை காய்கறி பயிர்களுக்கு அனைத்து பகுதிகளிலும் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அணைகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், ஆறு மற்றும் நீரோடைகளி்ல தண்ணீர் அதிகமாக காணப்படும். தாழ்வான பகுதிகள் முதல் மலைப்பாங்கான பகுதிகள் வரை மலை காய்கறி விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காணப்படும். இச்சமயங்களில் அனைத்து பகுதிகளிலும் உள்ள செடி, ெகாடிகள் காய்ந்து விடும். தொடர்ந்து, மே மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.