பொன்னேரி: பொன்னேரி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் அறிவுரை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 27 பேர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் பொன்னேரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர், வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.