மண்ணச்சநல்லூர் பெண்ணை கரம்பிடித்த இலங்கை வாலிபர்

தா.பேட்டை: நாமக்கல் மாவட்டம் அரூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம்-கிருஷ்ணவேணி தம்பதி மகன் புஷ்பநாதன் (26). இவர் தன் பெற்றோருடன் இலங்கையில் உள்ள கோணமுட்டாவ, ஹப்புதலை பகுதியில் வசித்து வருகிறார். புஷ்பநாதன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியை சேர்ந்த கென்னடி-கமலாதேவி தம்பதி மகள் சவுந்தர்யா (24) என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் ஒருவரை, ஒருவர் விரும்பியுள்ளனர். இதை பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனிடையே புஷ்பநாதன் இலங்கை சென்றார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புஷ்பநாதனால் வர முடியவில்லை. அதன்பின் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியா வரும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து இந்தியா வந்த புஷ்பநாதன் நேற்று முன்தினம் சவுந்தர்யாவை கரம் பிடித்தார். அவர்களது திருமணம் திருப்பைஞ்சீலியில் உள்ள ஒரு மண்டபத்தில் எளிமையாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது. இதனால் மணமக்கள், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: