தா.பேட்டை: நாமக்கல் மாவட்டம் அரூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம்-கிருஷ்ணவேணி தம்பதி மகன் புஷ்பநாதன் (26). இவர் தன் பெற்றோருடன் இலங்கையில் உள்ள கோணமுட்டாவ, ஹப்புதலை பகுதியில் வசித்து வருகிறார். புஷ்பநாதன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியை சேர்ந்த கென்னடி-கமலாதேவி தம்பதி மகள் சவுந்தர்யா (24) என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் ஒருவரை, ஒருவர் விரும்பியுள்ளனர். இதை பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனிடையே புஷ்பநாதன் இலங்கை சென்றார்.