புதுடெல்லி: ‘கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, பாராசிட்டமல் அல்லது வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பிறகு 3 பாராசிட்டமல் 500 மிகி மாத்திரை எடுத்துக் கொள்ள சில மையங்களில் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.