போடி : போடிமெட்டு மலைச்சாலையில் 11வது முறையாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போடிமெட்டு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இந்த மலைச்சாலையில் கனமழையால், கடந்த சில வாரமாக தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று மலைச்சாலையில் 11வது முறையாக 8வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.