இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரராஜ பெருமாள் தேவி பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நகரில் உள்ள தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக தேர் வலம் வந்தது. சாலையின் இருபுறமும் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post வைகாசி திருவிழாவை முன்னிட்டு கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.