நான் 10 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி செய்தேன். இந்த ஆண்டு விளைச்சல் நன்றாகவே இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் திராட்டை பழங்கள் செடியிலேயே வெடித்து அழுகி வீணாகின்றன. மேலும் மழை காரணமாக வியாபாரிகளும் திராட்சைகளை வாங்க முன்வருவதில்லை. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ திராட்சை ரூ.40க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய ரூ.2.50 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், தற்போது ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பழங்களும் அழுகி வீணாவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.
The post திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சை: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.