இந்நிலையில், சர்வதேச கைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியை சேர்ந்த 2 தமிழக காவலர்களுக்கும் நேற்று மாலை ஆவடி பட்டாலியன் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் முதன்முறையாக இணைந்த தமிழக காவல்துறை சேர்ந்த 13வது பட்டாலியன் தலைமை காவலர் எஸ்.கண்ணன், அண்ணாநகர் காவல்நிலைய காவலர் எம்.கபில்கண்ணன் ஆகிய 2 பேருக்கும் இந்திய கைப்பந்து சங்க செயலாளர் தேஜ்ராஜ் சிங், தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி ஜெயராம், ஐஜி சந்தோஷ்குமார் உள்பட பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். சர்வதேச கைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற தமிழக காவல்துறையை சேர்ந்த 2 காவலர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வை தமிழக அரசு வழங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக காவல்துறை விளையாட்டு அணி வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post சர்வதேச கைப்பந்து போட்டியில் தமிழக காவல்துறை வெண்கல பதக்கம் வென்றது: அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran.