சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தமிழகத்தின் மாநில மலராக விளங்கும் செங்காந்தள் மலர் கார்த்திகை மாதத்தில் பூத்துக் குலுங்குவது வழக்கம். இதன் காரணமாக கார்த்திகைப்பூ எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதி, ஆசனூர் மற்றும் கடம்பூர் வனப்பகுதியில் அதிக அளவில் செங்காந்தள் மலர்கள் பூத்துள்ளன. சாலையோர வனப்பகுதியிலும் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் செங்காந்தள் மலரை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.