காரைக்கால்: காரைக்கால் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் கரை ஒதுங்கிய ராட்சத கப்பல் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டது. 2018 நவம்பர் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கி ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியதோடு மக்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது. அச்சமயம் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் காரைக்கால் துறைமுகத்திற்கு தூர்வார வந்த பலகோடி ரூபாய் மதிப்புடைய வீராபிரேம் என்ற அதிநவீன இயந்திரங்கள் கொண்ட தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் காரைக்கால் அருகே வடக்கு வாஞ்சூரில் தரை தட்டியது.