சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிட்ட யுடியூப் வீடியோ பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும், தேசிய கொடியை அவமதித்ததாகவும் தெரிவித்துள்ளார் என்று ராஜரத்தினம் என்பவர் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.