கடந்த வாரத்தில் பூக்கள் விலை குறைந்து விற்பனையானது. ஒரு கிலோ மல்லி ரூ.350, ஜாதிமல்லி, முல்லை ரூ.250, கனகாம்பரம் ரூ.600, அரளி ரூ.100, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.70, சாக்லேட் ரோஸ் ரூ.80 என விலை குறைந்து விற்பனையானது. இந்நிலையில், பவுர்ணமியையொட்டி நேற்று அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ.800, ஜாதிமல்லி, முல்லை ரூ.400, அரளி ரூ.180, சாமந்தி ரூ.260, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.70 என விலை உயர்ந்தது. அதிகாலை முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பூக்களை வாங்க கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குவிந்தனர். பூக்கள் விலை உயர்ந்த நிலையில், வியாபாரம் அமோகமாக நடந்தது. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் அனைத்து பூக்களின் விலையும் குறைந்த நிலையில், நேற்று பவுர்ணமியையொட்டி மீண்டும் விலை உயர்ந்தது. விவசாயிகள் கொண்டு வந்த பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது. அதேநேரத்தில், பூக்கள் வியாபாரமும் அமோகமாக நடந்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்’’ என்றார்.
The post பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.