லக்னோ: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிறு அன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை விட்டு மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.