புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று ரயிலில் பாய்ந்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்(49). இலுப்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் தற்போது கலீப் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கண்ணன் 2 நாள் விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெளியில் செல்வதாக கூறிச்சென்ற கண்ணன் அருகே உள்ள சிவபுரம் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். தகவலறிந்த காரைக்குடி ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.