இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் தமிழ்நாட்டில் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் 6.48 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சிறப்புத் தீவிர திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், 23.2.2026 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 26.3.2026 வரை, ‘படிவம் 6’ல் 6,48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதி வாரியான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 26.3.2026 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 6.4.2026 அன்றுள்ளவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த பட்டியலில் தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவர். 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியலானது, ஒரு ‘ஒருங்கிணைந்த பட்டியலாக’ இருக்கும். இப்பட்டியலானது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து (23.2.2026) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி வரையிலான காலத்தில் (26.3.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 6.4.2026 அன்று தயாரிக்கப்பட்டது) தொடர் திருத்தக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர், மேலும் அப்பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: