சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் (திமுக) பேசியதாவது: பெரம்பூர் தொகுதியில் அரசு தொழில் கல்லூரி (ஐடிஐ) அமைத்து தர வேண்டும். சின்னாண்டி மடம், சஞ்சய் நகர், எருக்கஞ்சேரி, எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசென்னை மாணவர்களும் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஒரு நூலகத்தை பெரம்பூர் தொகுதியில் அமைத்து தர வேண்டும்.