நகை மோசடி வடமாநில கும்பல் சிக்கியது

தண்டையார்பேட்டை: கடந்த 29ம் தேதி நாக்பூரில் இருந்து ஜிடி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்த வடமாநில கும்பல் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தாஜ் கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் இரண்டு ரூம்கள் வாடகைக்கு எடுத்து திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றி நகை வாங்கியதும் தெரியவந்தது. புகாரின்பேரில் பூக்கடை போலீசார் கமலேஷ்(40), அனிதா(38), நிர்மல்குமார்(41), மாலதி(40), சோனி(30) ஆகியோரை கைது செய்து  திருவள்ளூர் மாவட்ட டவுன் காவல் ஆய்வாளர் ரவிக்குமாருக்கு தகவல் கொடுத்து 5 பேரையும் அவரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 5பேரிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: