துணி வியாபாரியிடம் நூல் வாங்கி ரூ5.40 கோடி மோசடி


திருப்பூர்: திருப்பூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த துணி, நூல் வியாபாரி சேட்டன் சொக்காணி (35). இவரிடம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டத்தை சேர்ந்த பங்கஜ் அகர்வால் (34), அங்குஷ் சிட்லாங்கியா (54), ராகுல் குமார் சர்மா (50) ஆகிய மூவரும் கடந்த மாதம் திருப்பூருக்கு வந்து தங்களுக்கு நூல் மற்றும் துணிகள் தேவைப்படுவதாக கூறி அவரிடமிருந்து ரூ10 கோடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து 884க்கு நூல்கள் மற்றும் துணிகள் வாங்கியுள்ளனர். அதில் ரூ4 கோடியே 64 லட்சத்து 40 ஆயிரத்து 552யை மட்டும் கொடுத்துள்ளனர்.

மீதி ரூ5 கோடியே 40 லட்சத்து 59 ஆயிரத்து 332 தருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் தராமல் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து சேட்டன் சொக்காணி அளித்த புகாரில் மும்பையில் பதுங்கியிருந்த பங்கஜ் அகர்வால், அங்குஷ்சிட் லாங்கியா, ராகுல் குமார் சர்மா ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post துணி வியாபாரியிடம் நூல் வாங்கி ரூ5.40 கோடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: