ரத்த வெள்ளத்தில் சரிந்த மாமியாரை மீட்க முயன்ற மனைவி பிரியங்காவை அனுராக் சிங் துப்பாக்கியால் சுட்டார். அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த மூன்று குழந்தைகளையும் சுத்தியால் சரமாரியாக தாக்கினார். பின்னர், அவர்களது உடல்களை தரை தளத்திற்கு தூக்கி வீசி எறிந்தார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு அனுராக் சிங் தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த அனுராக்கின் சகோதரர் அஜித், அதே வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்து பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் தாய், அண்ணன், அண்ணி, 3 குழந்தைகளின் சடலங்கள் கிடந்தன. அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் 6 பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
The post தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்று ‘சைக்கோ’ நபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.