சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆயூள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, தனிநபர் கடன் தவணை, கிரெடிட் கார்டு கடன் தொகை, வீட்டுக்கடன் போன்ற அனைத்து வகையான மத்திய, மாநில அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் மாதாமாதம் வசூலிக்கப்படும் கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த 1 ஆண்டு கால அவகாசம் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதன்மூலம் நாடு முழுவதும் பல கோடி பேர் படிப்படியாக தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு பழைய சகஜநிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.