சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் செ.ஹைதர் அலி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். முன்னாள் வக்பு வாரிய அமைச்சர் நிலோபர் கபில் மீது அவரது உதவியாளரே புகார் கொடுத்திருப்பது தாங்கள் அறிந்ததே. அவருடைய ஊழல்கள் கணக்கிலடங்காதது. குறிப்பாக வக்பு வாரியத்தில் வாரிய தலைவர் இல்லாத தருணத்திலும், தலைவரின் வருகைக்குப் பிறகும் அவருடைய எண்ணப்படியே அனைத்தும் நடைபெற்றது. நிலோபர் கபீலுடைய தூதுவராக பெண் வழக்கறஞர் ஒருவர் செயல்பட்டார்.