பார்மா- இத்தாலியின் பார்மா நகரில் எமிலியா ரோமாக்னா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், 39 வயதான முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2வது சுற்றில், 25 வயதான செக்குடியரசின் கேடரினா சினியகோவாவுடன் மோதினார். 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் சினியகோவா வெற்றி பெற்றார்.