சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 600 பேர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திமுக-வில் தங்களை முறைப்படி இணைத்துக்கொண்டனர். திரு.வி.க நகர் பெருங்குடி மாவட்ட செயலாளர், கோவை தொண்டாமுத்தூர் பொதுச்செயலாளர், ஆர்.கே.நகர் தொகுதி செயலாளர் உள்ளிட்ட பலர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அனைவரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.