போபால்: கான்கிரீட் கலவை வாகனத்தில் பதுங்கி, மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல முயன்ற 18 பேரை மத்திய பிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளிமாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதற்கிடையே, வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, மாநில அரசுகளின் முயற்சியில் ரயில்களில் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.