சிர்சி ஹெலிபேட்யிலிருந்து ஆன்மீக யாத்திரைகளை ஏற்று கொண்டு கேதர்நாத் பகுதியில் இருக்கக்கூடிய ஹெலிபேடிற்கு தரை இறங்குவதற்கு முன்பாக ஹெலிகாப்டரின் ரோட்டாரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க முடியாமல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஹெலிபேடில் தரையிறங்க முடியாமல் மேலேயே வட்டமடித்து கொண்டிருந்தது.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஹெலிகாப்டரால் விபத்து ஏற்படுமோ என்று அஞ்சி ஓடினர். இருப்பினும் ஹெலிபேடிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தரையிலேயே தரையிறங்கியது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதில் மொத்தம் 7 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்: 6 பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைப்பு appeared first on Dinakaran.