நிர்வாகத்தின் சார்பில் விருந்து நடைபெறும் அந்த அறையில் ,மின் கசிவு காரணமாக இத்தகைய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய தீ விபத்தின் காரணம் குறித்து தீயணைப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் வெப்பமானது அதிகரித்து காணப்படுகிற நிலையில் இது போன்ற தீ விபத்துகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.