டெல்லி: வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது இடையில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.