ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பூரிட்டி பென்டாவில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபாரம் ஏற்றி வந்த லாரி ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது தண்டவாளத்தில் டயர்கள் சிக்கிக் கொண்டன. தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ராயகட் நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.