புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள அசாருதீன் இது குறித்து நேற்று கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நெருக்கடியான கட்டத்தில் வேறு வழி இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். ஐபிஎல் தொடர் அனைவருக்குமே முக்கியமானது. இந்த தொடரில் விளையாடுவதன் மூலமாக நல்ல வருமானம் கிடைப்பதால் தான் வெளிநாட்டு வீரர்களும் விளையாட விரும்புகிறார்கள்.