கோவை: கொரோனா பரவும் இக்கட்டான குழலில் மதத்தை வைத்து பிரச்னையை உருவாக்க வேண்டாம் என்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா நம் தலைமுறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினால் தான் கொரோனா பரவுவதாக தவறான செய்தி பரப்பக்கூடாது என் அவர் தெரிவித்துள்ளார்.