திருமங்கலம்: திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருமங்கலம் நகரின் நடுவே அமைந்துள்ளது பத்ரகாளி மாரியம்மன் கோயில். இங்கு மகா கும்பாபிஷேகம் நேற்று கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த பிப். 3ம் தேதி விக்னேஷ்வரபூஜை, ஆனுக்கை பூஜை நடந்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால விக்னேஸ்வராதி, மகாபூர்ணா ஹீதி தீபாரதனை நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கடம் புறப்படாகி கோயிலில் வலம் வந்து மூலவிமானம், மகாகணபதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.