கேரளா போலீஸ் ஐஜி லக்சுமண் தெலங்கானாவில் அமைச்சராகிறார்: பதவியை ராஜினாமா செய்ய முடிவு

திருவனந்தபுரம்: கேரள போலீஸ் ஐஜி லக்சுமண் தெலங்கானா மாநில அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள   கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் லக்சுமண் (46). இவரது சொந்த ஊர் தெலங்கானா  மாநிலம் கம்மம்.  தற்போது  போக்குவரத்து பிரிவில் ஐஐியாக உள்ளார். 1997ல் ஆலப்புழா  கூடுதல்  எஸ்பியாக பணியை தொடங்கினார். திருவனந்தபுரம் எஸ்பி, குற்றப்பிரிவு   எஸ்பி, உளவுத்துறை என்று பல்வேறு துறைகளில்  பணிபுரிந்துள்ளார்.  இவரது  நெருங்கிய உறவினர்கள்  தெலங்கானா அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் லக்சுமணை அமைச்சராக நியமிக்க  தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்  தீர்மானித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி   உள்ளது. அதற்கு லக்சுமணும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஐஐி லக்சுமண் விரைவில் பதவியை  ராஜினாமா  செய்வார் என தெரிகிறது.

Related Stories: