செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் போலி ஆவணங்களை வைத்து மடாதிபதியாக பொறுப்பேற்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் கடந்த 7 ஆண்டுகளாக இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் போலி ஆவணங்களை காண்பித்து கந்தசாமி கோயிலின் ஆதினமாக ஆக முயற்சித்ததாக கூறப்படுகிறது. அத்துமீறி கோவில் மடத்துக்குள் நுழைந்த முத்துக்குமரனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.