சென்னை: நடிகை நயன்தாரா நேற்று வெளியிட்ட அறிக்கை: ராதாரவியின் பெண் வெறுப்பு பேச்சை கண்டித்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். பாலின ரீதியான கருத்துகளை சொல்லி பெண்களின் நிலையை தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள். இப்படியான ஆண்மை மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் பரிதாபப்படுகிறேன். மூத்த நடிகராகவும், இவ்வளவு வேலை அனுபவமும் கொண்ட ராதாரவி, இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன்மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார். ராதாரவி போன்ற நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாமல் துறைக்கு பொருத்தமின்றி போகும்போது புகழ் வெளிச்சத்துக்காக இதுபோல் தரக்குறைவாக நடந்துகொள்கின்றனர். இதில் அதிர்ச்சியான விஷயம், அவரது ஆணாதிக்க பேச்சுகளுக்கு கைதட்டல்களும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வருவதுதான்.