திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணி (50). கடந்த 10ம் தேதி இரவு ரோந்து பணியின்போது இடையில் இரவு 10.30 மணியளவில் ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு கணினி பிரிவில் பெண் காவலர் சூரியகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கு விவரங்களை பதிந்து கொண்டிருந்தார். அவரது அருகில் வந்த எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணி, ‘‘பனி அதிகமாக உள்ளது, குளிர் தாங்கமுடியவில்லை’’ என பேச்சை தொடங்கி, திடீரென பெண் போலீஸ் கன்னத்தில் முத்தமிட்டு கட்டி அணைத்து இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு உளவுத்துறை போலீஸ் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்ததை கண்டதும் அவரிடம் பெண் போலீஸ், எஸ்.எஸ்.ஐ.தான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறி உள்ளார். உளவுத்துறை காவலர் மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி உள்ளார். மறுநாள் பெண் போலீஸ், மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக்கிடம் எஸ்.எஸ்.ஐ மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். அவர் விசாரணை எதுவும் நடத்தாமல் எஸ்.எஸ்.ஐ.யை சஸ்பெண்ட் செய்தார்.
பின்னர், டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனை விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பெண் போலீஸ் அருகில் சென்று கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார். சில நொடிகளில் இருவரும் முத்தம் கொடுக்கின்றனர். இவ்வாறு 2 நிமிடம் 50 நொடிகள் ஓடும் வீடியோவில் பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார். பின்னர் உளவுத்துறை போலீஸ்காரரிடம் அந்த பெண் போலீஸ் பொய் புகார் அளிப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், வீடியோவை பார்க்கும்போது இருவரின் சம்மதத்துடன் சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால், அந்த பெண் போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி