சென்னை: சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் பள்ளிக்கு சென்ற சிறுவன் கடத்தப்பட்ட நிலையில் போலீசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் சில மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். சென்னை பட்டாளம் பிரகாஷ்-துர்கா தம்பதியினர் மகன் அஜய், பிரகாஷ் மின் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்கேஜி படித்துவரும் சிறுவன் அஜயை உறவினர்கள் எனக்கூறி இரண்டு பெண்கள் அழைத்து சென்றுள்ளனர். பின்பு குழந்தையை அழைத்து செல்ல வந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரிள் புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.