கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற புதிய கூட்டமைப்பை தொடங்கியுள்ளார். இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த மாகாணத்தின் முதல் முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அவரது 5 ஆண்டு பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்த கூட்டமைப்பு கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை புறக்கணித்து மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தது. அப்போது, தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக சிறிசேனா அளித்த உறுதியின் பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு ஆதரவளித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வடக்கு மாகாண கவுன்சிலில் தனது இறுதி உரையை விக்னேஸ்வரன் ஆற்றினார். அப்போது, ‘`தமிழ் மக்களுக்கு அரசியல் சுதந்திரம் வழங்குவதாக உறுதியளித்த சிறிசேனா, அதை செய்ய தவறிவிட்டார்.