மும்பை: இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் ராசி கன்னா, பல படங்களில் சொந்தக்குரலிலும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
நான் எந்த மொழிப் படத்தில் நடிக் கிறேனோ, உடனே அந்த மொழியை கற்றுக்கொண்டு பேசுவதில் அதிக கவனம் செலுத்துவேன். அதிக மொழிகளை தெரிந்துகொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ஒரு வேலையாகவே செய்கிறேன். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவேன். தவிர, ஒவ்வொரு மொழியிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஒரு நல்ல கேரக்டரில் நடிக்கும்போது, அங்கு மொழி என்பது அடுத்த பட்சமே. ரசிகர்களுடன் பேச அந்தந்த மொழியை கற்பது மிக அவசியம். அதனால்எந்தெந்த மொழிபடத்தில் நடித்தாலும், அந்த மொழியை உடனே நான் கற்றுக்கொள்கிறேன்.
பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, கதை கேட்காமல் நான் கால்ஷீட் கொடுத்தேன். அதாவது, இதில் நடிக்கும் வாய்ப்பை பவன் கல்யாணுக்காக ஏற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் ஏராளமான ரசிகர்கள், ‘பவனிஸம்’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்தனர். அவரது தீவிர ரசிகர்களை நேரில் பார்த்து வியந்தேன். ஒவ்வொருவரும் சிறந்த படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் கடுமையாக உழைக்கின்றனர். அனைவரும் இந்திய திரையுலகிற்கு தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதனால், பல்வேறு மொழிகளில் நான் பணியாற்றினாலும், எந்தஒரு வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை.
இந்தியில் ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் போன்ற ஹீரோக்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கின்றனர். அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்பதால், அவரது இயக்கத்தில் ஒரு பாடல் காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படு கிறேன். இந்த லிஸ்ட்டில் ரிஷப் ஷெட்டி, எஸ்.எஸ்.ராஜமவுலியும் இருக்கின்றனர். அவர்கள் இயக்கும் படங்களில் நடிக்க நான் காத்திருக்கிறேன்.
