சென்னை: ‘பூலோகம்’ படத்தை தொடர்ந்து என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம், ‘அகிலன்’. ஹீரோயின்களாக பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சுந்தர் தயாரித்துள்ளார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஜெயம் ரவி கூறியதாவது: எனது 20 வருட திரையுலக வாழ்க்கையில் அனைவருடைய ஒத்துழைப்பும், பாராட்டும் எனக்கு நிறையவே கிடைத்துள்ளது. எப்போதும் நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். மேக்கிங்கைப் பொறுத்தவரை, ‘அகிலன்’ மிகவும் கஷ்டமான படம். இதெல்லாம் கிடைக்குமா? இதையெல்லாம் படமாக்க முடியுமா என்று நாங்கள் நினைத்தபோது, தயாரிப்பாளரால்தான் இதையெல்லாம் உருவாக்க முடிந்தது. மற்றும் அனைத்து விஷயங்களையும் சாத்தியமாக்கிய படக்குழுவிருக்கு நன்றி. பிரியா பவானி சங்கர், தமிழ் பேசி நடிக்கும் ஒரு ஹீரோயின். ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறார்.