கொரட்டாலா சிவா எழுதி இயக்கும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இது சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தயாரிக்கும் படம். இதில் கவுரவ வேடத்திலும் ராம்சரண் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க முதலில் தேர்வான ஹீரோயின் திரிஷா. படக்குழுவினருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அந்த வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமானார். இப்போது அவருக்கும் ஒரு இந்தி பட வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதனால் இதில் நடிப்பது கேள்விக்குறிதான் என்றும் பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையே தலைக்கு மொட்டை அடித்து புதிய கெட்அப்புக்கு சிரஞ்சீவி மாறியுள்ளார்.