சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே என்ற படத்தை இயக்கிய செல்வராகவன், இதற்குமுன் சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படம், ஆயிரத்தில் ஒருவன் 2 என்று தகவல் வெளியானது.