சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ்

வரலாற்று சம்பவங்கள் படமாக்கப்படும்போது, அதில் வலிமையான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் ஆசைப்பட்டார். இப்போது அவரது ஆசை நிறைவேறியுள்ளது. பிரியதர்ஷன் மலையாளத்தில் இயக்கியுள்ள பீரியட் பிலிம், மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம். மோகன்லால், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன், பிரபு, கல்யாணி பிரியதர்ஷன், பிரனவ் மோகன்லால் நடிக்கின்றனர். இதில் ஆர்ச்சா என்ற கேரக்டரில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘சரித்திரக் கதையில் வலிமையான கதாபாத்திரங்கள் இருப்பது வாடிக்கை.

அதுபோன்ற ஒரு வலிமையான, துடிப்புமிக்க கேரக்டரில் நடிக்க பல வருடங்கள் காத்திருந்தேன். அதன் பலனாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் சிந்திக்காமல், படப்பிடிப்பில் டைரக்டர் பிரியதர்ஷன் சொல்லிக் கொடுத்ததை மட்டுமே செய்துள்ளேன். அதுவே மிகச் சிறந்த நடிப்பாக போற்றப்படும் என்று நம்புகிறேன். இப்படத்தில் நடித்த பிறகுதான் தொடர்ந்து சரித்திரக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது’ என்றார்.

Related Stories: