இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஆஸாத் தற்போது திரையுலகில் நடிகர், இயக்குனர் ஆகியிருக்கிறார். ராஷ்ட்புத்ரா படத்தை இந்தியில் இயக்கி நடிப்பதுடன் அப்படத்தை தமிழில் ராஜ்யவீரன் பெயரிலும் மொழி பெயர்த்திருக்கிறார். சுதந்திரபோராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத் வாழ்க்கையை தழுவி உருவாக்கியுள்ள இப்படம்பற்றி ஆஸாத் கூறும்போது,’முழுக்க தமிழ் கலாச்சாரத்தை மையப் படுத்தி இப்படம் உருவாகிறது. தேசியவாத கொள்கைக்கு எதிரானவர்களை கையாளுவதுடன் அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும்.