நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான்ஸ்டர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா நெல்சன் கதை கூறிய போது எலியும், நீங்ளும் என்று கதை சொன்னார். அதற்கு நான் பல புலிகளுக்கு வில்லனாக நடித்துவிட்டேன். ஆனால் இப்போது எலிக்கு வில்லனா என்று கேட்டேன் என தெரிவித்தார்.