அனைத்து வருவாய் கோட்டத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இன்று (15ம் தேதி) விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். விவசாயம் தொடர்பாக ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரகத்திலும் நடைபெறும் கூட்டத்திலும் தவறாது கலந்து கொள்ளவேண்டும். வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

The post அனைத்து வருவாய் கோட்டத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: